Sunday, May 9, 2010

அம்மா.......
என்னை தாயாக ஆக்கி அவள் எந்தன் சேயாகி
உலகத்திற்கு என்னை அம்மா என்று காட்டியவள்.
பொறுமையின் திலகம் அவள்.கோபமே வராத என் சின்ன சிட்டு.
சிறகுகள் முளைத்தபோதும் எல்லை மீறாத என் சொல்லையும் மீறாத
என் சொக்கத்தங்கம் அவள்.
வீடும் வேலையுமாக எந்திரமாக இருந்த என்னை
உலகம் என்ன என்று காட்டிய தித்திக்கும் தேன் துளி அவள்.
நான் கோபமாய் இருக்கையில் எனக்கு அறிவுரை சொல்லும் என் குரு அவள்.
face book ஐ எனக்கு அறிமுகம் செய்து அதில் சில நண்பர்களையும் சேர்த்துவிட்டு
என் பொழுதை நல்ல விதமாக போக்க உதவிய என் அன்பு செல்லம்.
தான் பள்ளியில் படிப்பதை எல்லாம் எனக்கு சொல்லித்தந்து
அதன்மூலம் தானும் கற்று எனக்கும் புதிய செய்திகளை நிதம் சொல்லித்தந்த
என் ஆசான் அவள்.
என் செல்ல மகளே என் செல்வ மகளே
அடுத்த பிறவியில் நான் உந்தன் சேயாக வேண்டும்.
என் அன்பு தாயாக நீ ஆக வேண்டும்.
வாழ்க அன்னையர் தினம்.